ஆறுமுகம் கந்தையா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலகஷ்மி வெளியீடு, அஷ்டலகஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (கொழும்பு 11: அஷ்டலகஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).
32 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 22×14.5 சமீ.
சைவ சமயத்தில் வழிபாட்டுக்கான நெறிகளாவன காணபத்திய நெறி, சௌர நெறி, வைணவ நெறி, சைவ நெறி, சாத்த நெறி, கௌமார நெறி, அநுபூதி நெறி எனப் பலவகைப்பட்டன எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன. இந்நூலில் சைவ முறைப்படி ஆலய வழிபாடு எவ்வாறு பேணப்படவேண்டும் என்பதை ஆசிரியர் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129092)