ஆ.வேலுப்பிள்ளை (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 102 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-389-1.
பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் சமயக்கட்டுரைத் தொகுப்பொன்று தமிழர் சமய வரலாறு என்ற தலைப்பில் 1980இல் வெளிவந்தது. அடுத்த பத்தாண்டுகளில் அவர் எழுதிய சிறந்த சமயக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. இதில் மக்களும் மதங்களும், சிந்துவெளியிலிருந்து திருகோணமலை வரை தென் கீழ்த்திசை வழிவந்த பாசுபதம், சோழநாட்டுப் பத்தியிலக்கியமும் பாண்டிநாட்டுப் பத்தியிலக்கியமும், திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை, தேவாரம் காட்டும் மாதோட்ட வரலாறு, அண்ணல் கேதீச்சரத்து அடிகள், திருவாசகரும் இலங்கைப் பௌத்தமும், திருவிளையாடற் புராணம்: சில குறிப்புகள், குமரகுருபரர் பாடிய அம்மை வழிபாடு, சன்னதி முருகன் வழிபாட்டு வரலாற்றுப் பின்னணி, பிள்ளையார் வழிபாடு: ஓர் ஆய்வு நோக்கு, ஈழநாட்டில் வயிரவர் வழிபாடு ஆகிய 12 தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.