கணபதி மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், இல. 6, இராணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுன் 1995. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
86 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21.5×14 சமீ.
வரைவிலக்கணமும் காலமும், தமிழர் சமயம்-தென்னாடுடைய சிவன், தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன், சைவ வேதாந்திகள், வடமொழி வேதம்-தமிழ்மொழி வேதம் இருவேறு, வேதாந்தத்தின் வளர்ச்சி, கற்றவர் தத்துவம் பேசுவர், வேதாந்திகளிடையே ஒன்றுக்கொன்று முரண்பாடு, தமிழ் வேதம், பிராமணியம், பிராமண எதிர்ப்பு இயக்கங்கள், இன்றும் பிராமணியம் நிலைத்து நிற்பதற்கான ஏதுக்கள், சிவபெருமானே பெரியவர், சைவசமயத்தவரின் தலையிடாக் கொள்கை, சிறுதெய்வ வழிபாடு, தோற்றம், சீர்திருத்தம், சிறுதெய்வ வழிபாடு-ஆரிய வழக்கு, உள்ளிருந்தே கொல்லும் வியாதி, அன்புநெறி- தமிழ் வழக்கு, அச்சநெறி- ஆரிய வழக்கு, சித்தாந்தம் தெளிவு, வேதாந்தம் கழிவு, சிவபூசை வழிபாட்டு மொழி, பண்ணிசை, என இன்னோரன்ன 45 தலைப்புகளின் கீழ் சைவ- ஆரிய மரபுகளிடையே உள்ள வேற்றுமைகளை நூலாசிரியர் ஒரு விவாதமாகக் கொண்டுசெல்கின்றார். ஆரிய எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு என்பன பற்றிய நூலாசிரியரின் கருத்துக்கள் நூலிடையே விரவிக்கிடக்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115285)