ஆ.பத்மாவதி. சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3. மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7ஆவது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 18×12 சமீ.
ஆசிரியர் எழுதிய 10 பக்தி இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சைவத்தின் தோற்றம், தில்லையும் சாங்கியத் தத்துவமும், தமிழகத்தில் காரோஹண சைவம், காவியங்கள் கூறும் புறஞ்சேரி, காரைக்காலம்மையாரின் சுடுகாட்டு வருணனை, தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியின் தோற்றம், பேரரசை உருவாக்கும் சிற்றரசு, கௌளாச்சாரத் தத்துவத்தில் திருவொற்றியூர்க் கோவில், காஞ்சி காமாட்சி கோயிலின் பௌத்த ஆதாரங்கள், சப்தமாதர்- நதிப்பெண்களே ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 177454)