9159 சோபகிருது வருஷ நவராத்திரி-சிவராத்திரி விரத நிர்ணயம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள், எஸ்.சுவாமிநாத சிவாசாரியார், அரு.இராமநாதக் குருக்கள், க.சுவாமிநாத சிவாசாரியார் (இணைஆசிரியர்கள்). திருக்கேதீச்சரம்: சிவானந்த குருகுலம், 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).

30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

சோதிட அடிப்படையில் சோபகிருது வருடத்துக்கான (1963-64) நவராத்திரி, மற்றும் சிவராத்திரி தினங்களை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள், தருமபுரம் சிவஸ்ரீ எஸ்.சுவாமிநாத சிவாசாரியார், கண்டனூர் சிவஸ்ரீ அரு.இராமநாதக் குருக்கள், திருவாவடுதுறை சிவஸ்ரீ க.சுவாமிநாத சிவாசாரியார் ஆகிய நால்வரும் இணைந்து கணிப்பிட்டு இந்நூலை வெளியிட்டிருந்தார்கள். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135000).

ஏனைய பதிவுகள்