விசுவலிங்கம் செல்வரத்தினம். கனடா: ஜெயகுமார் ஜனுசன், 1வது பதிப்பு, சித்திரை 2004. (யாழ்ப்பாணம்: மேனகா அச்சகம், 342, காங்கேசன்துறை வீதி).
xvi, 136 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×13.5 சமீ.
விநாயகர் வணக்கம், ஆறுபடை வீடுகள், படைவீடு வீட்டின் தத்துவம், முதற்படை வீடு திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றக் கவசம், இரண்டாவது வீடு திருச்செந்தூர், திருச்செந்தூர் கவசம், மூன்றாவது படைவீடு பழநி, பழநி கவசம், நாலாவது படைவீடு சுவாமிமலை, சுவாமிமலை கவசம், ஐந்தாவது படைவீடு திருத்தணிகை, திருத்தணிகை கவசம், ஆறாவது படைவீடு பழமுதிர்ச்சோலை, பழமுதிர்ச்சோலை கவசம் ஆகிய 15 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அளவெட்டியைச் சேர்ந்த இந் நூலாசிரியர் விஞ்ஞான, கணித பாடநூல்கள் பலவற்றின் ஆசிரியருமாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 150403).