முக்தார் ஏ.முஹம்மது (பதிப்பாசிரியர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
(6), 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
நற்குணங்கள் என்ற முதலாம் பிரிவில் ஒற்றுமை, சகோதரத்துவம், மன்னித்தல், விட்டுக்கொடுத்தல், மற்றவரை மதித்தல், பிறர் நலன் பேணல், கூட்டுப் பொறுப்பும் ஒத்துழைப்பும், நோயாளரைத் தரிசித்தல், மரணித்தபோது, தீமையை வெறுத்தல், உணவு-பானம்-உடை, சிக்கனமும் உலோபித்தனமும், பொறாமை கொள்ளாதே, புறம் பேசாதே, கொடிய பாவங்கள், பெற்றோர், சூனியம், மதுபானம் ஆகிய பாடங்களும், நம்பிக்கை என்ற இரண்டாம் பிரிவில் ஸூறத்துல் மாஊன், ஈமான், யா அல்லாஹ் இலாஹி லஸ்து, அல்லாஹ் தஆலா, அஸ்மாஉல் ஹீஸ்னா, மலாயிக்கத்துல்லாஹ், ஸூறத்துல் குறைஷ், குத்துபுல்லாஹ் ஆகிய பாடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் ஆலோசனைக் குழுவில் மௌலவி ஏ.எம்.எல்.எம்.பழீல், ஜனாப் ஏ.எம்.ஸமீம், ஜனாப் ஏ.ஆர்.எம்.அப்துல் காதிர் ஆகியோரும் விசேஷ ஆலோசகராக ஜனாப் ஏ.ஆர்.எம். அப்துல் காதிரும் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85462).