மு.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: மு.திருநாவுக்கரசு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1994. (யாழப்பாணம்: மாறன் பதிப்பகம்).
(22), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×10.5 சமீ.
ஓர் இன மத மொழி நோக்கு, கடின யாப்பு முறை, ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதலுக்கான ஏற்பாடு, ஜனாதிபதியின் அதிகாரமும் அவரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடும், பிரேமதாசாவை ஓரம் கட்டவும் சிறிமாவை களத்திலிருந்து அகற்றவும் யாப்புரீதியான ஏற்பாடுகள், ஐ.தே.க.வினைப் பாதுகாக்க விகிதாசாரப் பிரதிநிதித்துவம், ஜே.ஆரின் சாதக நிலையை உறுதிப்படுத்த மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு, அரசியலமைப்பால் உருமறைப்புச் செய்யப்பட்ட நவீன முடியாட்சி, புதிய நிலைமைகளின்கீழ் ஜே ஆரின் அரசியலமைப்பு உள்நாட்டு யுத்தம்தான் வழியா? ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் 1994களின் தேர்தல்கால அரசியல் நிலைமைகள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. மு.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104421).