பொன்னம்பலம் இராமநாதன். யாழ்ப்பாணம்: அகில இலங்கை அரசசேவை சித்த ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2000. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கை, கந்தர்மடம்).
xxiv, 242 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 22.5×15 சமீ.
இந்நூல் இரண்டு பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது. முதலாம் பகுதி சித்த மருந்துகளின் அட்டவணை (மருந்து வகை, குடிநீர், சூரணம், மாத்திரைஃகுளிகை, இலேகியம்ஃஇளகம், மெழுகும் குழம்பும், மணப்பாகு (ளுலசரி), எண்ணெய்ஃதைலம், செந்தூரம், பற்பம், கறுப்பு, புற மருந்துகள்), மருந்துச் சரக்குகளின் சுத்தி (தாவர இனம், விலங்கினம், தாது இனம்) ஆகிய இரு விடயங்களை உள்ளடக்கியது. இரண்டாவது பகுதி மருத்துவம் சார்ந்த சில முக்கிய விடயங்களை விளக்குகின்றது. இதில் மூலிகைகளிலிருந்து சாறு எடுக்கும் முறைகள், கூட்டுச் சரக்குகள், மருத்துவக் கலைச் சொற்கள் (வடமொழிஃதென்மொழி), தமிழ் எண்கள், சீந்தில் சர்க்கரை எடுக்கும் முறை, புடங்களின் வகைகள், மருத்துவ அளவைகள், எந்திரங்கள், வெடியுப்புச் செய்நீர் தயாரிப்பு முறை, சீலை மண் செய்தல், மாத்திரைக்கட்டு, தோலா இயந்திரம், தாது இனச் சரக்குகளுக்குச் சுருக்குக் கொடுத்தல், அனுபானம் (தேன்ஃதாய்ப்பால்). மருந்துகளைப் பழக வைத்தல், ஐந்திணை நிலங்கள், ஐம்பூதத் தலங்கள், காயகற்பம், மருந்துசார்ந்த இயல்கள் ஆகிய பல்வேறு விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130590).