எஸ்.கே.பிரபாகரன். பருத்தித்துறை: அன்னை வெளியீடு, வியாபாரிமூலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரின்டர்ஸ்).
(4), 140 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ.
க.பொ.த. உயர் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமானதோர் அலகாக கம்பனிக் கணக்கு அமைகின்றது. அவ்வகையில் கம்பனிக் கணக்குகள் தொடர்பான கொள்கைகள் பயிற்சிகளை இலகு வழியில் வழங்கி மாணவர்களின் உயர்ந்தபட்ச பெறுபேறுகளுக்கு இந்நூல் வழிசமைக்கின்றது. இந்நூல், அறிமுகம், பங்கு வழங்கல் கணக்குகள், மீட்கத்தக்க முன்னுரிமைப் பங்குகளின் மீட்பு, கம்பனி முடிவுக் கணக்குகள், நிதிப்பாய்ச்சல் கூற்றுக்கள், பின்னிணைப்புகள் (கடந்தகால வினாக்கள்), சில குறிப்புரைகள் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.கே.பிரபாகரன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1991இல் முகாமைத்துவத் தொழில் நிருவாகமாணிச் சிறப்புப்பட்டத்தைப் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 126868).