நா.ஞானகுமாரன். பருத்தித்துறை: யாழ்ப்பாணத்து சுவாமிகள் சபை, வியாபாரி மூலை, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).
xiv, 68 பக்கம், தகடு, விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ., ISBN: 955-9158-00-7.
யாழ்ப்பாணத்திலுள்ள வதிரியில் அவதரித்த ஆத்மஞானி அருளம்பல சுவாமிகளின் வாழ்வும் பணிகளும் பற்றிய செய்திகளை இந்நூல் வழங்குகின்றது. மகாகவி சுப்பிரமணிய பாரதியினால் ‘ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பாணத்து சாமி’ என்று போற்றப்பெற்ற அருளம்பல சுவாமிகள் வியாபாரிமூலையில் 1942இல் சமாதியடைந்தார். சமாதியெய்திய ஐம்பதாவது ஆண்டை நினைவுகூர்ந்து இந்நூல் வெளியிடப்பட்டது. கலாநிதி நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86922).