9938 இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும்: 1800-இக்காலம்: ஏழாம் வகுப்புக்கேற்றது.

எஸ்.எப்.டி.சில்வா. கொழும்பு: ஸ்ரீலங்கா பப்ளிஷிங் கம்பெனி, 111, டாம் வீதி, 1வது பதிப்பு, 1954. (கொழும்பு: G.P.D.Jinadasa and Sons Printing Works, 279, டாம் வீதி).

312 பக்கம், வரைபடம், விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12 சமீ.

பிரித்தானிய பரிபாலனத்தில் கரையோர மாகாணங்கள், பிரித்தானிய பரிபாலனத்தில் இலங்கை ஒன்றாதல், விவசாயமுறை மாற்றங்களும் அபிவிருத்தியும், பிரித்தானியர் காலத்தில் அரசியல் அதிகார அபிவிருத்தி, தேசோத்தாரண சேவைகள், இக்கால உலகம், பொருளாதாரப் புரட்சி, மகா அரசியற் புரட்சிகள், நெப்போலியனின் ஆட்சியில் பிரான்சீய சாம்ராச்சியம், தேசிய இன உணர்ச்சி விருத்திக்காலம் 1815-1848, பிரித்தானிய  பொதுநலவமைப்பு, ஆசியாவில் தேசிய இன உணர்ச்சி வளர்தல், ஐக்கிய அமெரிக்கா வல்லரசாக வந்தமை, முதலாவது உலக மகா யுத்தம், புதிய முறை அரசாங்கங்களின் தோற்றம், இரண்டாவது உலகமகா யுத்தம் ஆகிய 16 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் எஸ்.எப்.டி.சில்வா உதவி வித்தியாதிபதியாக இலங்கையில் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 217911).

ஏனைய பதிவுகள்