துஷால் தம்மிக்க விதானகே (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (பொல்கஸ்சோவிட்ட: New Ferrine Printers Limited, No.19, Saumya Uyana, Halpita)
(14), 75 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1274-40-5.
இரண்டு தசாப்த யுத்தம், ஐந்து ஆண்டு போர் நிறுத்தம் அடுத்தது என்ன என்ற கேள்விக்குப் பதில் பெறும் வகையில் இலங்கை தேசிய சமாதானப் பேரவை 21.2.2007இல் ஒரு கருத்தரங்கினை கொழும்பில் நடத்தியிருந்தது. அக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இக்கருத்தரங்க நிகழ்ச்சித்திட்டத்தின் ஆலோசனைக்குழுவில் கலாநிதி ஜெஹான் பெரேரா, உபாலி அத்தநாயக்க, எஸ்.பி.நாதன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தம் அவசியமா, நாம் நலம்பெற வேண்டும், நாம் மார்தட்டிப் பேசுவது எதனைப்பற்றி, சமாதானத்தை அடைவது எவ்வாறு, நாட்டில் சமாதானம் மலரவேண்டும், உயிரைக் காப்போம், போரினால் ஒருபோதும் தீர்வுகாண முடியாது, உதவிபுரிய முடியாவிட்டால் தீமையாவது செய்யாதிருப்போமாக, சமாதானத்தை அடைவதற்கான அரிய சந்தர்ப்பம், திடமான நடவடக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்பன போன்ற தலைப்புகளில் பன்னாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தேரர்கள் போன்றோரின் உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.