A.M.அபூபக்கர். கல்முனை: பொய்கை வெளியீடு, வாகித் லொட்ஜ், சாய்ந்தமருது 3, 1வது பதிப்பு, ஜுன் 1966. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
(6), 125 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12.5 சமீ.
மத்தியகால முஸ்லிம்களுள் அறிவியல் துறையை வளர்த்துப் பணியாற்றிய சில முஸ்லிம் அறிஞர்களைப் பற்றிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாயுள்ளது. அறிவியலின் பல துறைகளிலும் ஈடுபட்டவர்களை தனித்தனித் துறைவாரியாகப் பிரித்து, அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம், அவர்களின் கண்டுபிடிப்புகள், நூல்கள் என்பவை பற்றிய விபரங்களைப் பதிவுசெய்துள்ளார். மத்திய கால முஸ்லிம்கள், மருத்துவம், இரசாயனம், புவியியல், வரலாறு, வானியலும் பௌதிகமும், உயிரியல், கணிதம், தத்துவம், இலக்கியம், கல்லூரிகளும் நூலகங்களும், இஸ்லாமியச் சிறு கலைகள் ஆகிய தலைப்புகளில் இந்நூலின்அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87072).