16369 யாழ்ப்பாணம் இணுவில் பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணி ஐயரின் ஆக்கங்கள்-தொகுதி 1.

மா.த.ந. வீரமணி ஐயர் (மூலம்), ப.சிவானந்த சர்மா, சுசிலாதேவி வீரமணி ஐயர், சு.ஸ்ரீகுமரன் -இயல்வாணன், துஷ்யந்தி சுகுணன், ரஜனி நரேந்திரா (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxii, 1086 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ., ISBN: 978-624-5911-07-3.

பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணி ஐயரவர்கள் சென்னை அடையாறு கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் நடனக் கலையைப் பயின்றவர். ஸ்ரீமதி ருக்மணிதேவி அருண்டேலைக் குருவாகக் கொண்டு வித்துவான் பட்டத்தை நாட்டியத்துறையிலும் பெற்றவர். 300இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இயற்றியவர். இவர் இயற்றிய கீர்த்தனைகள், ஊஞ்சற் பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள், வில்லிசைகள், பாடசாலைக் கீதங்கள், கலை மன்றக் கீதங்கள், திருப்பள்ளியெழுச்சி பிரபந்தங்கள், குறவஞ்சி என்று மிக நீண்ட பட்டிலாகக் கொண்டது. இவரது படைப்புக்களில் இன்று காணக்கிடைக்கும் ஆக்கங்களைத் தொகுக்கும் முயற்சியின் முதற்கட்டமாக இத்தொகுப்பில் பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணி ஐயரின் 51 நாட்டிய நாடகங்களும், 61 திருவூஞ்சற் பாக்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12046 – இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 4: இறை நோக்கிய பயணம்.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14