16371 ஆற்றுகை 8-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 7, காட்சி 8, ஆனி 1999-பங்குனி 2000.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச்  2000. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ், நாட்டுக்கூத்து சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில், மகாபாரதத்துக்கான தெருக்கூத்து அரங்கு (வெங்கட் சுவாமிநாதன்), மன்னார் மாதோட்டக் கூத்து பயில்முறை ஓர் அறிமுகம் (எஸ்.ஏ.உதயன்), நொண்டி நாடகம் (காரை சுந்தரம்பிள்ளை), வட்டுக்கோட்டை கூத்து மரபும் அதன் தோற்றுவாய்க்கான சமூக பின்புலமும் (ச.தில்லை நடேசன்), கடவுளுக்கு கூத்தாடுகிறோம்- நேர்காணல் (பா.இரகுவரன்), நிகழ்வும் பதிவும் (வு.கண்ணன்), ஒரு திகிலூட்டும் அரங்கியல் அனுபவம் (அல்லி), விமர்சனம்-வேள்வித் தீ (அரங்கநேசன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்