ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (யாழ்ப்பாணம்: ஹரிஹணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).
72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 40.00, அளவு: 20.5×14.5 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், மலையகத்தின் நிகழ்கலைகள் (அந்தனி ஜீவா), சடங்கு, நடனம், நாடகம் (கந்தையா ஸ்ரீகணேசன்), எம்.வி.கிருஷ்ணாழ்வாரின் நாடகப் புலமைசார் பார்வை (பா.இரகுவரன்), சிங்கள நாடகக் கலைஞர் ஜெரோம் டி சில்வாவுடன் ஒரு நேர்காணல் (ஆசிரியர் குழு), ஆற்றுகையும் திருப்தியும் (பூமிகா), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு -5 (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), காவலூரின் அரங்கியல் தளத்தில் செயற்பட்ட சில அனுபவக் குறிப்புகள் (வளநாடன் கிருஸ்ரி கனகரட்டினம்), புதிய நூல் வரவுகள், கூத்து-அமைப்பும், அழகியலும், அதன் அரசியலும் (சி.ஜெயசங்கர்), ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை ஒரு நோக்கு (கந்தையா ஸ்ரீகந்தவேள்), நாட்டுக் கூத்தின் எதிர்காலமும், தேசிய அரங்கை நோக்கிய தேடலும் (யோ.ஜோன்சன் ராஜ்குமார்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.