தம்பிராசா துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 18×12 சமீ., ISBN: 955-1162-05-6.
சிறுவரது சிந்தனையைத் தூண்டவல்ல 12 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. மனிதர்களே உயர்ந்தவர்கள், குரங்கும் யானையும், நரியும் சேவலும், ஆனையும் பானையும், ஒற்றுமை தான் நமது பலம், உணவே உபதேசம், குயிலும் சேவலும், பசுமை மலர்ந்தது, உண்மை உயர்வு தரும், வாத்துக்குஞ்சும் கோழிக்குஞ்சும், அற்ப ஆசை ஆபத்தையே தரும், உழைத்து உண்ணத் தெரிந்து கொள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.