16663 சமம் உருவகக் கதைகள்.

செங்கதிரோன் (இயற்பெயர்: த.கோபாலகிருஷ்ணன்). மட்டக்களப்பு: செங்கதிர் இலக்கிய வட்டம், 607, பார் வீதி, 1வது பதிப்பு, ஜ{ன் 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

x, 70 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-624-6177-03-4.

மட்டக்களப்பில் கலை இலக்கியச் செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்படுபவர்களில் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் முதன்மையானவர். அம்பாறை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், மட்டக்களப்பில் வாழ்ந்து கிழக்கு மாகாணத்திற்கும் அப்பால் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தனது தமிழ் ஆக்க இலக்கியப் பணிகளை வியாபித்து வருபவராவார். உருவகக் கதைகள், பிற இலக்கியங்களில் இருந்து வேறுபடும் இலக்கிய உருவாக்கமாகும். அது மாந்தனுக்கு வெளியே உள்ள அனைத்திலும் மாந்தனைக் காண்கின்றது. விலங்குகள், பறவைகள், கற்கள், முட்கள் இவையெல்லாம் உருவகக் கதைகளில் மாந்தரைப் போலவே பேசுகின்றன. மாந்தரை நெறிப்படுத்துகின்றன. சமம், கவனம், அவசரம், தியாகம், வீம்பு, சபலம், பரஸ்பரம், நிறைகுடம், சுயம், தடுப்பு, தாபம், மீறல், வலை, பலவீனம், பரிமாற்றம், தம்பட்டம், தெளிவு, புரிதல், அழகு, தாய்மை, நட்பு, தண்டனை, வலி, இனம், தொண்டு, கைம்மாறு, உழைப்பு, பாடம், அறியாமை, சுபாவம் ஆகிய 30 உருவகக் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10132 கதிர்காமத்தை தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்: அகத்தியர் முதல் யோகர் சுவாமிகள் வரை.

என்.கே. எஸ். திருச்செல்வம். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு: அகில இலங்கை இந்து மாமன்றம், 1வது பதிப்பு, 2014  (கொழும்பு 6: