16913 காலமதாய் ஆகிவிட்ட கலைத்தவசி.

மலர்க்குழு. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், முருங்கன், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

136 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4609-20-4.

அ.ம.தி.அடிகள் செ.அன்புராசா அவர்களின் தந்தையாரான செபஸ்தியான் செபமாலை (தம்பிராசா மாஸ்டர்) “குழந்தை” என்ற புனைபெயரிலும் அறியப்பட்டவர். குழந்தை செபமாலை ஆசிரியர் பாடல்கள் பாடுவதிலும், நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், நெறியாழ்கை செய்வதிலும் பிரபல்யமானவர். “கலைத்தவசி” என்ற இவரின் பணிநயப்பு மலர் 2014இல் முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தினரால் இவர் வாழும் காலத்திலேயே வெளியிடப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்நினைவு மலரில் இவரது மறைவையொட்டி வழங்கப்பட்ட அஞ்சலி உரைகளும், நினைவுக் குறிப்புகளும், சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும், ஏனைய சில பதிவுகளும், புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. (செபஸ்தியான் செபமாலை 08.03.1940-08.01.2022)

ஏனைய பதிவுகள்

12418 – தமிழ் ஆரம் 2016.

சுகிர்தா சிவசுப்பிரமணியம், டிலக்ஷிகா அரவிந்தன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ். இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பதிப்பகம், 681, காங்கேசன்துறை வீதி). xvii, 90 பக்கம், அட்டவணைகள்,

14286 நாங்கள் யார்?

சிபில் வெத்தசிங்க. மொரட்டுவ: சிறுவர் உரிமைகள் கருத்திட்டம், சர்வோதய சட்டசேவை இயக்கம், தம்சக் மந்திர, 98, ராவத்தாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2001. (மொரட்டுவை: விஷ்வலேகா அச்சகம்). (12) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,