15158 யுத்தத்தின் இழப்புக்கள்: எதிர்காலத்திற்கான சவால்களும் முன்னுரிமைகளும்.

இலங்கை தேசிய சமாதான பேரவை. கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதான பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, மே 2003. (கல்கிசை: சர்வோதய விஷ்வலேகா அச்சகம், இல. 41, லும்பினி அவென்யு, இரத்மலானை).         

(36) பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×21.5 சமீ.

இலங்கை தேசிய சமாதான பேரவையும் மார்கா நிறுவனமும் இணைந்து நடத்திய இலங்கையின் யுத்தத்தின் பொருளாதார சமூக அரசியல் மற்றும் மனித இழப்புகள் பற்றிய 2002 ஆம் ஆண்டின் ஆய்வின் பெறுபேறாக இச்சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரசுரம் இவ்வாய்வின் மிக முக்கியமான செய்திகளை மிக இலகுவான முறையிலும் பூரணப்படுத்தப்பட்ட தகவல்களாகவும் சுருக்கமாகவும் வழங்குகின்றது. இது சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டிருந்தது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதற்பகுதியான “இந்த யுத்தத்தின் இழப்புகள் யாவை?” என்ற பிரிவில் மனித, சமூக அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் இழப்புகள் பற்றி விபரிக்கப்படுகின்றது. இரண்டாம் பகுதியில் ‘யுத்தத்தில் தொடருகின்ற இழப்புகள் யாவை?” என்ற விடயமும் மூன்றாம் பகுதியில் “யுத்தத்தின் மரபுகளை எதிர்நோக்கல்” என்ற விடயமும் பேசுபொருளாகியுள்ளன.

ஏனைய பதிவுகள்