15479 இரண்டும் ஒன்று.

எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா. கிண்ணியா 7: பாத்திமா றுஸ்தா பதிப்பகம், 46/3, பெரியாற்று முனை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 15-113 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-0715-24-4.

குருநாகல், பானகமவைச் சேர்ந்த கவிஞர் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா எழுதிய 84 கவிதைகளின் தொகுப்பு இது. ஈழத்துக் கவிதை உலகிற்கு இவர் புதியவரானாலும், இவரது கவிதைகளில் முதிர்ச்சித் தன்மை மிளிர்வதை அவதானிக்க முடிகின்றது. கல்விப்பணியில் தன்னை ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக எனப் பல்வேறு தளத்திலும் வளர்த்துக் கொண்டவர். இவரது கவிதைகளில் குடும்ப, சமூக, சர்வதேசப் பார்வைகள் எனச் செறிந்திருப்பதை பரவலாகக் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

13A09 – சூடாமணி நிகண்டு: மூலமும் உரையும்.

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பரிசோதித்தவர்), யாழ்ப்பாணம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 10வது பதிப்பு, ஆடி 1912, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (சென்னை: வித்தியாநுபாலனயந்திரசாலை). 182 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14158 பருத்தித்துறை கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சித்திரத்தேர் வெள்ளோட்ட சிறப்புமலர் 23.2.2017.

இ.திருமாறக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: தேர்த் திருப்பணிச் சபை, கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: சிவா ஓப்செட் பிரின்டர்ஸ், வியாபாரிமூலை). xvviiiஇ 33 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,