முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). புதுச்சேரி 8: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600014: பிரிண்ட் பிராசஸ்).
158 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 22.5×15 சமீ., ISBN: 81-938307-7-2.
ஆற்றொழுக்கு நடையில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இந்நூலை ஆசிரியர் வடிவமைத்துள்ளார். நூல் முழுவதும் தொய்வில்லாத எழுத்து நடையில் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். செய்யுள் வகைகள், சுவடி பெறப்பட்டமை, அம்மானை, இராமாயணம், இராமாயணக் கதைச் சுருக்கம், இராமர் அம்மானை, ஏட்டெழுத்து, குஞ்சரத்துக்கு எய்தல், புத்திரப்பேற்று யாகம், தாடகைக்கு அம்பு விட்டுக் கொல்லுதல், சீதை பிறப்பு, இராமருக்குப் பட்டம் சூட்டுதல், குகனைச் சந்தித்தல், பரதன் அறிதல், சூர்ப்பனகை மூக்கரிதல், மாரீசன் மான் வடிவு எடுத்தல், சீதையைக் கவர்ந்து செல்லுதல், சீதையைத் தேடுதல், அனுமனைச் சந்தித்தல், வாலிக்கும் சக்கிருபனுக்கும் சண்டை இடம்பெறல், அனுமனிடம் ஆளி கொடுத்து அனுப்புதல், இராவணனுக்கும் அனுமனுக்கும் இடையில் உரையாடல், விபூஷணன் புத்தி சொல்லுதல், சண்டைக்கு ஆயத்தமாதல், கம்பகர்ணன்வருகை மயிரரக்கனின் மாறுவேடம், அனுமனின் தூது செல்லதல், இராவணனின் தளபதிகள், இராவணன் யுத்தம் செய்தல், விபுஷணனுக்கு பட்டம் சூட்டுதல், அனுமர் சீதையினை அழைத்து வருதல், நாட்டாரியல் நம்பிக்கைகள், மண்டோதரி கனாக் காணுதல், இடக்கண்துடித்தல் மட்டக்களப்பில் இராமாயணம் என இராமாயணத்தின் சுருக்கத்தை இப்பதிப்பாய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.