17932 ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள்.

குப்பிழான் ஐ.சண்முகன் (மூலம்), த.அஜந்தகுமார் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு , கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

72 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-91-8.

இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 270ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் குப்பிழான் ஐ.சண்முகன் (1946-2023) எழுதிய 17 கட்டுரைகள் தேடித் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஈழத்தின் மூத்த எழுத்தாளரான இவர் தனது 78 ஆண்டுக்கால வாழ்வில் 57 ஆண்டுகளை ஈழத்து இலக்கிய உலகோடு பிணைத்திருந்தவர். குப்பிழான் ஐ.சண்முகன் தனது வாழ்வியல் அனுபவங்களை 2010ஆம்ஆண்டு வெளிவந்த ‘அம்பலம்’ இதழில் ‘சுயபுராணம்’  என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினார். அவ்விதழ் சிறிது காலத்தில் நிறுத்தப்பட்ட சூழலில் சுயபுராணத் தொடரும் தடைப்பட்டுப் போயிற்று. பின்னர் யோ.கர்ணன் அவர்கள் ‘தீபம்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது தூண்டுதலால் ‘ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள்’ என்ற தொடரை 21.08.2016-15.01.2017 காலப் பகுதியில் எழுதினார். மேற்படி சுயபுராணம், ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள் ஆகிய இரு பத்திரிகைத் தொடர்களையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. குப்பிழான் ஐ.சண்முகனின் மறைவின் 31ஆவது நாள் நினைவாக 23.05.2023 அன்று வெளயிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

10132 கதிர்காமத்தை தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்: அகத்தியர் முதல் யோகர் சுவாமிகள் வரை.

என்.கே. எஸ். திருச்செல்வம். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு: அகில இலங்கை இந்து மாமன்றம், 1வது பதிப்பு, 2014  (கொழும்பு 6:

11982 நயினை மான்மியம்.

நயினை வரகவி நாகமணிப் புலவர் (மூலம்), ப.க.மகாதேவா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ப.க.பரமலிங்கம், 31, அருத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, வைகாசி 2005. (கொழும்பு 6: கிரிப்ஸ்). 213 பக்கம், தகடுகள், விலை: ரூபா

11946 மறந்துபோகா வாழ்வின் கதை.

கை.சரவணன், ந.மயூரரூபன். யாழ்ப்பாணம்: எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜுலை 2016. (சுன்னாகம்: முத்து பிறின்டர்ஸ்). (4), 68 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12 சமீ. இணுவையூர் சிதம்பர