வைகுந்தம் கணேசபிள்ளை. வேலணை: பழனிநாதன் ஆரூரன், வேலணை மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: கஜன் பிரின்டர்ஸ், கோண்டாவில்).
xiv, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
வேலணை மேற்கு பெரியபுலத்தில் எழுந்தருளியிருக்கும் மகா கணபதிப்பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) பேரில் இணுவையம்பதி பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை அவர்கள் பாடியருளிய பிள்ளைத் தமிழ் பாடல்களின் நூலுரு இதுவாகும். பிள்ளைத் தமிழ், காப்பு, காப்புப் பருவம், பார்வதி காப்பு, நாரணன் காப்பு, முருகன் காப்பு, நாமகளும் பூமகளும், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம், சிறு தேர்ப் பருவம் ஆகிய 16 பிரிவுகளில் இப்பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டுள்ளது.