13720 உணர்வுகள்: நாடகங்களின் தொகுதி.

கலைக்கோட்டன் அ. இருதயநாதன். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).

68 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4628-46-5.

நூலாசிரியர் இருதயநாதன் ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர். மட்டக்களப்பு, பாலமீன்மடுவில் 08.05.1949இல் பிறந்த இவர் நாட்டுக்கூத்து, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றிலும் குறுந்திரைப்படத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நூலில் இவர் எழுதிய சமூக நாடகங்களில் பாடசாலையைக் கதைக்களமாகக் கொண்ட ‘உணர்வுகள்’, திருமணப் பேச்சுகள், மாப்பிளை தேடும் படலம், சாதிப் பிரச்சினை என்று ஒரு நடுத்தர குடும்பஸ்தனின் தொல்லைகளை முன்வைத்து இன ஐக்கியம் பேசும் ‘குருதிகளின் குலம் ஒன்றே’ என்ற நாடகம், குடிகாரத்தந்தையின் பொறுப்பற்ற ஏழைக் குடும்பத்தில் வாழும்  கெட்டிக்காரச்சிறுமியொருத்தி  பற்றிய நாடகமான ‘கௌரவம்’, வைத்தியசாலைப் பின்னணியில் தனியார் வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை என்று ஒப்பீட்டில் நகர்த்தப்படும் ‘இரக்கம்’, சிங்கள வைத்தியரின் பெருந்தன்மையை மெச்சி விபரிக்கும் ‘கடையாணி’ என ஐந்து குறுநாடகங்களை இந்நூலில் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

Real money Web based casinos

Articles What’s the Better Poker Site The real deal Money? Banking Tips for Online casinos Totally free Spins Incentive Slots In addition to Modern Jackpots

10258 கட்டுருவாக்கவாதம்: கற்றல் கற்பித்தலுக்கான அணுகுமுறை.

சுப்பிரமணியம் பரமானந்தம். வவுனியா: சுபம் வெளியீடு, கோவில் வீதி, குருமண்காடு, 1வது பதிப்பு, 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு). viii, 108 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள்,