13889 யாழ்ப்பாணத்து நல்லூர் தேரடிச் செல்லப்பா சுவாமிகள் திவ்விய சரித்திரம்.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: க.கனகராசா, தொழிலதிபர், மில்க்வைற் தொழிலகம், 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

நல்லூர் தேரடி செல்லப்பா சுவாமிகள் பின்பற்றிய ஞானத் துறவுவாழ்வு பற்றிய இவ்வரலாற்று நூல் இலங்கை சிவபூமி, நல்லூரை நனைத்த ஞானவெள்ளம், இன்றைய நல்லூர், நல்லூர்த் தேரடி, தேரடிக்குத் தென்புறம், பூர்வாச்சிரமப் புதினம், அகத்திலும் புறத்திலும் உண்டான மாற்றங்கள், மூலையிலிருந்து முற்றம் வரை, உலகத் துறவும் உன்மத்தர் போக்கும், முத்துப்போன்ற சிந்தனைத் துளிகள், புத்தாடை புனைந்த வண்ணம், சித்துக்கள் வரத் தொடங்கின, அண்டி வந்த அடியவர் கூட்டம், முல்லைத்தீவுச் சீடன் முத்தி பெற்றமை, ஆளுமைவாய்ந்த அருமையான சீடர், முன்னரே அறிந்த திருமுகம், ஞானமுறுக்கேற்றியமை, சோதனைக்கு மேற் சோதனை, சொன்னவண்ணம் செய்த பணிவு, நாற்பது நாள் நற்றவம், யோகன் செத்துப்போனான், கதிர்காம யாத்திரை, மீட்சியில் உவகையும் உற்றதறிந்து தெளிந்ததும், இது ஒரு பாலைவனப் பசுந்தரை, இலுப்பை மரத்தடியைப் பார், நல்லூரான் நனையப்போகிறார், கைத்திறன் வாய்ந்த கலைஞன், சேர் இராமநாதன் தலைவணங்கியமை, நோயுறுவது உடம்பா உயிரா, வேகங் கெடுத்தாண்ட வேந்தன், கூழ்ப்பானை பட்டபாடு, வெளியே நின்று பார், ஐந்து ஆண்டுக்காலப் பயிற்சி, மகா சமாதிப் பேறு, குருநாதன் செல்லப்பன் சீர், முனி சொன் மொழி, நற்சிந்தனை ஆகிய குறுந்தலைப்புகளின் வழியாக செல்லப்பா சுவாமிகளின் சீவிய சரித்திரம் சுவையாகக் கூறப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16446).

ஏனைய பதிவுகள்

Casino Addert Quickbit I Norge

Content Vikings go berzerk spill – Norge Casino Og Holdbarhet Se på Alle Bonusene Du brist på grunn av totalt 600 kroner elv anstifte påslåt,