11391 வீரபாண்டிய கட்டப்பொம்மன் (நாட்டுக்கூத்து).

நீ.மிக்கோர்சிங்கம். யாழ்ப்பாணம்: மிக்கோர்சிங்கம் அமிர்தவாசகம், 15/1, முதலாம் குறுக்குத்தெரு, பாஷையூர், 1வது பதிப்பு, மாசி 2004. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).

xvi, 77 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20.5×14 சமீ.

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னன். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள்.

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவரது கதை நாட்டுக்கூத்து நாடகமாகப் புனைவுபெற்றுள்ளது. இந்நூல் ஜேர்மனியில் வாழும் அ.மிக்கோர்சிங்கம் மனோகரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53030).

ஏனைய பதிவுகள்

Appareil À Thunes Du Appoint Effectif

Satisfait Lesquelles Ressemblent Les bénéfices Et Inconvénients Des Prime Sans nul Archive ? – Apprenez les faits ici maintenant Soirée pour Interrogation Les Casinos De