வ.சிவசுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: சி.சிவகுமாரன், 75/1 நல்லையா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
xvi, 129 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19×13 சமீ.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வழக்கிலிருந்துவந்துள்ள ஒரு ஏட்டுச்சுவடி சுருதிநூல் முறையாகும். மூலநூலாசிரியர் பெயர் அறியப்படாத இந்தத் தொன்மையான ஏட்டுச்சுவடியின் மீள் பதிப்பு இதுவாகும். இந்து மத ஆய்வு பற்றிய வேதாந்தம் என்னும் உபநிஷதத்தை எளிய உரைநடையில் இவ்வேடு பொதிந்துவைத்திருக்கின்றது. வேதாந்த பரிபாஷைச் சொற்களை ஆசிரியர் சம்ஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கத் துணியாதபோதிலும், வேதாந்த மரபு தவறாது, பேச்சுத் தமிழில் வெளிவந்ததொரு அத்வைத நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130607).