9130 சித்தார்த்தர் (கௌதம புத்தர்).

நவாலியூர் சோ.நடராசன். சென்னை 600 017: ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2003. (சென்னை 600021: சக்தி பிரின்டர்ஸ்).

152 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 17.5×12 சமீ.

கௌதம புத்தரையும் அவரது பௌத்தக் கொள்கைகளையும் இந்நூல் விளக்கமுனைகின்றது. புத்தர் தம்மை ஒரு தீர்க்கதரிசி என்றோ, தேவதூதர் என்றோ சொல்லிக்கொண்டதில்லை. அவரது போதனைகள் குறைகள் எதுவும் அற்றவை என்றுகூட அவர் சொல்லவில்லை. தாம் புரிந்துகொண்ட அளவில் இதுதான் மானிட விடுதலைக்கான வழி என்றும் இவ்வழி மனுக்குலத்தின் அனுபவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறினார். சுருங்கக்கூறின் அவரே ஒரு திறந்த புத்தகமாக இருந்தார். தந்தை சுத்தோதனருக்கும் மஹாமாயா என்னும் தாய்க்கும் பிறந்த ஒரு தத்துவஞானியான புத்தரை பினபற்றியவர்களே  பின்னாளில் அவரைக் கடவுளாக்கிவிட்டார்கள். பிற மதங்கள் சொர்க்கத்தை அடைய வழிசொன்ன வேளையில் புத்தர் இவ்வலகிலேயே சொர்க்கத்தை நமது நீதி வழுவாத நெறிமுறைகளால் நிறுவிக்கொள்ள முடியும் என்றார். கௌதம புத்தரின் போதனைகளையும் வாழ்வுநெறியையும் இந்நூல் வாசகருக்கு எளிய தமிழில் வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 165290).

ஏனைய பதிவுகள்

ᐈ Busca Arame Golden Sevens Grátis

Content ¿Por Que Jogar Acimade Casino.Com Brasil? Gates Of Olympus desde Pragmatic Play Gosta puerilidade Apostar Caça-Níquel Dado? Experimente Então a dinheiro Real! Tudo em