9164 தெய்வீக வாழ்வு வாழ 500 இறை சிந்தனைகள்.

வி.செல்வரத்தினம். அராலி: செல்வி விஜயதெய்வேந்திரன் திருவருள் சோதி, 1வது பதிப்பு, 2009. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிரின்டர்ஸ்).

52 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.

அருள்நெறிச் செல்வர் வி.செல்வரத்தினம் அவர்கள் சேகரித்துத் தொகுத்து வழங்கியுள்ள இந்நூல் ஆன்மீகவாதிகளின் சிந்தனைகளை சுருங்கக் கூறுகின்றது. அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற செய்தியை உரைத்து, இறைவனை உணரவைக்கின்றது இந்நூல். இறை சிந்தனையில் மனிதன் மூழ்கும்போது, அவனுடைய உள்ளம் தூய்மையடைகின்றது. அந்தச் சிச்தனைகளை நமக்குள் நிறைக்கும் நூலாக இது அமைந்துள்ளது. எளிய மொழிநடையில் அமைந்துள்ள ஒவ்வொரு நற்சிந்தனையுமே தேவாமிர்தமாக அமைகின்றது. அராலியூர் வி.செல்வரத்தினம், ஒரு ஆன்மீக எழுத்தாளர். கணித விஞ்ஞான உயர் வகுப்பு மாணவர்களுக்கு உகந்த நூல்களை ஆக்கியவர். பல நூல்களின் சொந்தக்காரர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 204316)

ஏனைய பதிவுகள்