வஸ்தியாம்பிள்ளை சிவலோகதாசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 286 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-439-3.
இந்நூல் உடப்பூரின் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடுகள், மரபுகள் போன்றவற்றை ஆராய்வதுடன், அவற்றின் பரிணாம வளர்ச்சி அதில்உடப்பு ஊரவரின் பங்களிப்பு என்பவற்றையும் விபரிக்கின்றது. மேலும், இவ்வம்சங்களைப் பிரதிபலிக்கும் புகைப்பட ஆவணங்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. அறிமுகம்: வடமேல் கரைத் தமிழர் வரலாறு, ஆதி வரலாறும் உடப்பூரும், இறைபக்தியும் குலதெய்வமும், ஈடில்லாத் தொழில்கள், உலவும் வாழ்வியல் சடங்குகள், ஊர்த்திருவிழாக்கள், எளிமைமிகு கிராமிய வழிபாடு, ஏற்றம் தரு கல்வி, ஐவர் கதையும் ஆடித் திருவிழாவும், ஒன்றிணைக்கும் நாட்டாரிலக்கியங்கள், ஓங்கி உலகளந்த எங்கள் தமிழ்மொழி, ஒளவை வழி எங்கள் மொழி ஆகிய 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி வஸ்தியாம்பிள்ளை சிவலோகதாசன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஓர் முதுநிலை விரிவுரையாளர். உடப்பூரில் கல்விகற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக இளமாணி சிறப்புப் பட்டம் பெற்றவர்.