செ.பிரதீபன். யாழ்ப்பாணம்: அமரர் செல்வரத்தினம் பிரதீபன் நினைவு மலர், ஊட்டுக்குழி, நாச்சிமார் கோவிலடி, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நவாலி: றூபன் பிரின்டர்ஸ், முருகமூர்த்தி கோவில் வீதி, நவாலி கிழக்கு).
62 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
செல்வரத்தினம் பிரதீபன் மானிப்பாய் இந்தக்கல்லூரியின் பழைய மாணவரும் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய மாணவருமாவார். வாழ்க்கை என்றால் என்ன என்ற தலையங்கத்தின்கீழ் 50 தலைப்புகளில் அவரால் தொகுக்கப்பட்டுள்ள நூல் இது. அறிவு, குழந்தை, தாய், தந்தை, பிள்ளை, சுயபுத்தி, கடமை, கல்வி, மாணவர்கள், சாதி, மதம், குரு, உறவுகள், ஆவிகள், உயிர் உடல் என பன்முகப்பட்ட ஐம்பது தலைப்புகளில் இந்த சிறுகட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 191021).