தவபாக்கியம் கிருஷ்ணராசா. உரும்பிராய்: திருமதி கி.தவபாக்கியம், ஒஸ்கா ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 101, கண்டி வீதி, கச்சேரியடி). (2), 132 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. “கடந்துபோன தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறாள் தனேஸ்வரி. தன்னைக் கொடுமைப் படுத்தியவர்கள் மீது-தானும் வஞ்சம் தீரக்காமல் எவ்வளவு மன உறுதியுடன் வாழ்ந்து காட்டுகிறாள்? குடும்பப் பெருமை வெற்றியடைகிறது. கீதோபதேசம் அவளின் வாழ்வைச் செம்மைப்படுத்தியது. கொடுமையில் அவள் யாரிடமும் கடுமையாக நடந்துகொள்வில்லை. பொறுமை கடலிலும் பெரிது என்பர். ஆம், அவள் பொறுமையைக் கடைப்பிடித்ததால் இப்போ அவள் தனிக்காட்டு ராணியாக இருக்கிறாள். ஆண்டவனை வாழ்த்தியபடி. இனி வேண்டுவதொன்றில்லை” – நூலாசிரியர் முகவுரையில்.
14568 ஆனந்த இராகங்கள்: பொன்விழா சிறப்பு மலர்.
நெல்லை லதாங்கி (இயற்பெயர் திருமதி ஆனந்தராணி நாகேந்திரன்). கரவெட்டி: ஆனந்தா நாடக மன்றம், மகாத்மா வீதி, நெல்லியடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (பருத்தித்துறை: வெற்றிவிநாயகர் ஓப்செட் பிரிண்டர்ஸ், செட்டித் தெரு). xiii, 75