மு.சதாசிவம். ஈரோடு 638004: உலகத் தமிழியக்கம், 7 வள்ளியம்மை 2ஆம் தெரு, பெரிய வலசு, 1வது பதிப்பு, 2009. (சிதம்பரம் 1: காக்ஸ்டன் பிரின்டர்ஸ், 7/46, வடக்கு வீதி).
92 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21×14 சமீ.
தமிழகத்தைச் சேர்ந்த பன்மொழிப்புலவர் பேராசிரியர் முனைவர் மு.சதாசிவம், ஈழத்தமிழர்களின் 26 படைப்பிலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் ஈழத்தமிழர்களின் இனவாத அவலங்கள் தொடர்பாக அவ்வந்நூலாசிரியர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை அல்லது பாத்திரங்கள் கூறுவதாகக் குறிப்பிடும் கருத்துக்களைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்திய அமைதிப்படை உள்ளிட்ட இலங்கை இராணுவ அட்டகாசங்கள், இன அழிப்பு அவலம் போன்றவை இங்கு தமிழக வாசகர்களுக்காகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.