வெலிப்பன்னை அத்தாஸ். வெலிப்பன்னை: மொடர்ன் ஸ்டடி சென்டர், 41B, முஸ்லிம் வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2016. (வெலிப்பன்னை: நீதா புத்தகத்தாய்).
(16), 72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-4956-01-8.
‘இதிலுள்ள கவிதைகள் மரபுக் கவிதைகளா, புதுக் கவிதைகளா என்ற விசாரத்தையும் கடந்து ஒட்டுமொத்தமாக இத்தொகுப்பிலுள்ள கவிதைப் பிரதிகளை ஒருசேரப் பயிலுகின்ற பொழுது அத்தாஸ் தனக்கானதொரு கவிதை உருவத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றுணர முடிகின்றது. அந்த உருவக் கட்டமைப்பானது அவரது சகல கவிதைகளிலும் வெளிப்படும் ‘தொனி’ யினால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மொழியை ஊடகமாகக் கொண்ட ஒவ்வொரு இலக்கியப் பிரதியிலும் அப்பிரதிக்கான படைப்பாளியின் தொனி வெளிப்படும். அத்தொனியானது பிதுங்கலாகத் தெரியவில்லை. அந்தப் பிரதிக்குள்ளே யுடிளவசயஉவ இருக்கும். ஆழ்ந்து அப்பிரதியைப் பிரித்துப் பார்த்தால் அது தெரியவரும். அவ்வாறான தொனியே அத்தாஸின் கவிதைப் பிரதிகளின் பொதுப் பண்பாக இருக்கின்றது. அதுவே அவரது தனித்துவமாகவும் இருக்கிறது’. (மேமன் கவி, முன்னுரையில்).