நா.முத்தையா (ஆசிரியர்). நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1977. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).
(14), 88 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 27×22 சமீ.
நாவலப்பிட்டியிலிருந்து வெளிவரும் சைவ சமய மாத இதழின் 30வது ஆண்டு மலராக வெளிவந்துள்ள சிறப்பு மலர் இது. வையம் துயர்தீர வழி, ஆத்ம தரிசனம், மகான்களின் மகிமை, இராமகிருஷ்ண மிஷனும் பணிகளும், முருகன் மகிமை, அத்வைத மகா சமுத்திரம், உள்ளும் புறமும் ஒத்து வாழ்தல், கற்பனவும் இனியமையும், சிவாகமக் கிரியைகள், சிவ சிந்தனை, ஆத்மஜோதி, மாவைப்பள்ளு, மானிட வாழ்வு, ஈயா மனிதரை ஏன் படைத்தாய், பக்தி, கலாயோகி கி.ஆனந்தகுமாரசுவாமி, செம்பொருள் காணும் அறிவு, யாவரும் ஆராய்ந்து தெளியவேண்டிய உண்மைகள், பழமொழி உணர்த்தும் சமய உண்மைகள், பதினெண் சித்தர்கள், இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை, ஸூபியாக்கள் வகுத்த வாழ்க்கை நெறி, வேலன் கைவேல், அமைதியும் ஆற்றலும் பெறக்கூடுமா? பேரானந்தம் பெற வழி, மதமும் அதன் சாராம்சமும், கேட்டாரைப் பிணைக்கும் கீதம், குடி கெடுக்கும் குடி, இந்து மதம் காட்டும் அறநெறி ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளையும் கவிதைகளையும் தாங்கி இம்மலர் வெளிவந்துள்ளது.