சுரனுதா அன்ரன் சுதாகரன். வல்வெட்டித்துறை: ம.அன்ரன் சுதாகரன், 9/8, பழைய ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (யாழ்ப்பாணம்: ஜோய் பிரிண்டேர்ஸ்).
viii, 66 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-51337-0-8. உளநோயால் பாதிப்புக்குள்ளான ஒருவரை உள மருத்துவ விடுதியில் அனுமதிப்பது முதல் அவரது புனர்வாழ்வில் குடும்பத்தினர் எவ்விதம் நடைமுறை ரீதியாகப் பங்கேற்கலாம் என்பதை இந்நூலில் காணமுடிகின்றது. உளநோயுடையவர் விடுதியில் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றிய பொதுவான அறிமுகம், உளநோயுடையவரை வீட்டில் பராமரித்தல், உளநோயுடையவருடன் தொடர்புள்ள சில பிரச்சினைகளும் தீர்வுகளும், உளநோயுடையவரது குடும்பத்தினர் நெருக்கீடுகளை எதிர்கொள்ளச் சில அடிப்படை உத்திகள், என நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 221241).