அ.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). செங்கலடி: அ.செல்லத்துரை, சிவதொண்டன் நிலையம், 2வது பதிப்பு, மார்ச் 1986, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை).
viii, 116 பக்கம், தகடு, விலை: ரூபா 12., அளவு: 19×12.5 சமீ.
யாழ்ப்பாணத்துச் சிவயோக சுவாமிகள் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு உபதேசித்தருளிய அருள்மொழிகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. சுவாமியுடன் கூடி வாழ்ந்த காலங்களில் தொகுப்பாசிரியரும் வேறு சில அணுக்கத் தொண்டர்களும் நேரில் கேட்டனவும், பல பழைய அன்பர்களால் தெரிவிக்கப்பட்டவையுமாகிய சுவாமிகளின் அருள்மொழிகளே இவை. கிழக்கு மாகாணம், செங்கலடியில் உள்ள சிவதொண்டன் நிலையத்தைச் சேர்ந்த அ.செல்லத்துரை என்பார் தொகுத்தளித்த இந்நூல் சுவாமிகளின் 22ஆவது குருபூசை நினைவு வெளியீடாக 22.3.1986 அன்று இரண்டாவது பதிப்பாக வெளியிடப்பட்டது.