சின்னத்துரை சோதிலிங்கம். யாழ்ப்பாணம்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, காரைக்கால் வீதி, இணுவில், 1வது பதிப்பு, 2003. (இணுவில்: யோகநாதன் கிரபிக்ஸ்அன் ஓப்செட் பிறின்ரேர்ஸ், காங்கேசன்துறை வீதி).
iv, 250 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.
மல்லாகம் மகா வித்தியாலயம், இணுவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிய சி.சோதிலிங்கம் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் இந்துநாகரிகத்தில், குறிப்பாக நுண்கலைகள் பற்றிப் பேசும் நூலாகும். நுண்கலைகள் ஓர் அறிமுகம், நுண்கலைகளில் கட்டடக்கலை, பல்லவர் காலக் கட்டடக்கலை, சோழர்காலக் கட்டடக்கலை, விஜயநகர காலக் கட்டடக்கலை, நாயக்கர்காலக் கட்டடக்கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, தென்னாட்டு ஓவியங்கள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.