சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (உதவி ஆசிரியர்கள்), சாந்தி நாவுக்கரசன்; (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xii, 280 பக்கம், தகடுகள், விலை: ரூபா 650., அளவு: 27.5×21.5 சமீ., ISBN: 978-955-9233-19-0.
இந்து சமயத்துக்கானதொரு பல்தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது பதினோராவது தொகுதியாகும். இதில் இந்து சமயம் தொடர்பான தகவல்கள் ம முதல் மௌ வரையிலான அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. இத்தொகுதிக்கான நூலாக்கக் குழுவின் எழுத்தாளர்களாக பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வி.சிவசாமி, கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், திரு க.இரகுபரன், திரு. ஸ்ரீ பிரசாந்தன், திரு. ச.முகுந்தன், திருமதி தேவகுமாரி ஹரன், திருமதி இந்திராதேவி சதானந்தன், திருமதி ஹேமலோஜனி குமரன், திருமதி நித்தியவதி நித்தியானந்தன், செல்வி ச.நந்தினி, திரு.சு.துஷ்யந்த், திரு.நா.வாமன், திரு.எஸ்.சுதாகரன், திரு.தம்மிக்க ஜயசிங்க, திரு.எஸ். கோபிநாத், திரு.ம.ப.மகாலிங்கசிவம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.