க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xxiv, 444 பக்கம், தகடுகள், படங்கள், விலை: ரூபா 500., அளவு: 22.5×15 சமீ.
2007இல் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட உரைகளின் தொகுப்பு. அரசியலும் சமூகமும் (முதலாம் பாண்டியப் பேரரசு காலச் செப்பேடுகளும் வரலாறும், பல்லவர் ஆட்சி நிர்வாகமுறை, பல்லவர் காலத்து தேவதானங்களும் பள்ளிச் சந்தங்களும், பல்லவர் காலத்துப் பெண்கள், நவகண்டம்-பகுப்பாய்வு உளவியல் நோக்கு), சமயமும் தத்துவமும் (சைவசமய மரபில் வேதாகமங்கள், தமிழ்நாட்டுப் பௌத்தம், தமிழகத்தில் சமண சமயமும் வைதிக சமயங்களும், தேவாரங்களில் சைவசமயக் கோட்பாடுகள், திருமுறைகளில் சைவசித்தாந்த சிந்தனைகள், பக்தி இலக்கியங்களில் சைவசித்தாந்தம்), கோவில்களும் கலைகளும் (திருஎவ்வளுர் திருக்கண்ணபுரம், திருவாலி திருநகர்க் கோயில்கள், திருக்காளத்தி, மாமல்லபுரத்துச் சிற்பங்கள், திருஞானசம்பந்தர் பாடிய புதிய பண், பல்லவர் காலப் பண்ணிசை, பக்தி இலக்கியங்களில் அணிகல வகைகள்), இலக்கியமும் அழகியலும் (பக்தி இலக்கியம்- ஓரு அறிமுகம், பல்லவர்கால பக்தி இலக்கியங்களில் பக்தி ரசம், பக்திப் பாடல்களில் இராவணன், இலங்கையில் பல்லவர்கால சம்ஸ்கிருத மொழிச் செல்வாக்கு, தமிழ்ஞான சம்பந்தர், காரைக்காலம்மையாரும் ஆண்டாளும், நம்மாழ்வார் பாசுரங்கள்) ஆகிய நான்கு பெரும்பிரிவுகளின்கீழ் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளினதும் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. கட்டுரைத் தலைப்புக்கள் அடைப்புக் குறிக்குள் காணப்படுகின்றன.