9200 இணுவில் செகராசப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்.

ச.வே.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: இளந்தொண்டர் சபை, கந்தசுவாமி கோவில், இணுவில், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).

25 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×22 சமீ.

இந்நூலில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள், காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலாட்டுப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம்,  சிறுதேர்ப் பருவம் ஆகிய பத்து தலைப்புகளில் இணுவையூர் செகராசசேகரப் பிள்ளையார் கோவிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் மேல் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84629).

ஏனைய பதிவுகள்