9202 கடவுள் மாமுனிவர் அருளிய திருவாதவூரடிகள் புராணமும் புலவர் ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அவர்களது படனவிளக்க உரையும்.

ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

xviii, 315 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 22×14.5 சமீ.

பாயிரம், மந்திரிச் சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண்சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் ஆகிய ஏழு அத்தியாயங்களின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதுவரை 17 நூல்களை எழுதிய மாதாஜி,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றவர். நாவலப்பிட்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் தமிழ், சைவசமய சிறப்பாசிரியராகக் கடமையாற்றியவர். காரைநகர் வர்த்தாக் கல்வி நிலைய குருகுலம், கிளிநொச்சி குருகுலம் ஆகியவற்றின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். குப்பிளானில் 1931இல் பிறந்த இந்நூலாசிரியர், இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் திரு ஈங்கொய் மலை ஸ்ரீ லலிதா சமாஜத்தில்  சந்நியாசம், ஸ்ரீ வித்யா மந்திரம் ஆதியன பெற்று ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி என்ற சந்நியாச நாமம் பெற்றுக்கொண்டவர். ஆசிரியரின் இயற்பெயர் நூலில் குறிப்பிடப்படவில்லை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236614).

ஏனைய பதிவுகள்