சிவயோக சுவாமிகள். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432, காங்கேசன்துறை வீதி).
34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
மாவிட்டபுரத்தில் வைகாசி 1872இல் பிறந்தவர் சிவயோக சுவாமிகள். பள்ளிப்படிப்பை முடித்து கிளிநொச்சி நீர்ப்பாசன அலுவலகத்தில் களஞ்சியப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். நல்லூர் கோவிலில் செல்லப்பா சுவாமிகளின் தரிசனம்பெற்றபின்னர் முழுமையான ஆன்மீகவாதியாகியவர். அவர் தன் வாழ்நாளில் அவ்வப்போது பாடல்களாகவும், உபதேசங்களாகவும் கவிதைகளாகவும் உரைகளாகவும் பக்தர்களுக்கு அருளியவை பின்னாளில் நற்சிந்தனைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. நற்சிந்தனை நூலிலுள்ள முருகப்பெருமானைப் பற்றிய திருப்பாடல்களை மாத்திரம் திரட்டித் தொகுத்து தனிநூலாக்கியுள்ளனர் சிவதொண்டன் சபையினர்.