சிவயோக சுவாமிகள் (மூலம்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432, காங்கேசன்துறை வீதி).
vi, (2), 48 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ.
யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தின் 18ஆவது பிரசுரமாக சர்வதேச புத்தக ஆண்டையொட்டி 1973இல் வெளிவந்துள்ள நூல். மாவிட்டபுரத்தில் வைகாசி 1872இல் பிறந்தவர் சிவயோக சுவாமிகள். பள்ளிப்படிப்பை முடித்து கிளிநொச்சி நீர்ப்பாசன அலுவலகத்தில் களஞ்சியப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். நல்லூர் கோவிலில் செல்லப்பா சுவாமிகளின் தரிசனம்பெற்றபின்னர் முழுமையான ஆன்மீகவாதியாகியவர். அவர் தன் வாழ்நாளில் அவ்வப்போது பாடல்களாகவும், உபதேசங்களாகவும் கவிதைகளாகவும் உரைகளாகவும் பக்தர்களுக்கு அருளிய நற்சிந்தனைகளின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.