நவாலியூர் வை.நல்லையா (உரையாசிரியர்). கொக்குவில்: வை.நல்லையா, இலங்கைமணி சைவநூற் பதிப்பகம், உயரப்புலம், கொக்குவில் மேற்கு, 1வது பதிப்பு, நளவருடம், வைகாசி மாதம், மே 1977. (அச்சக விபரம் தரப்படவில்லை).
பக்கம் 194-424, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்திற்கான உரை, தேவாரப் பதிகங்களுடன் கூடியதாக வெளிவந்துள்ளது. இவ்விரண்டாம் பாகத்தில் இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம் ஆகிய இரு சருக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இலைமலிந்த சருக்கத்தில் எறிபத்த நாயனார் புராணம், ஏனாதிநாத நாயனார் புராணம், கண்ணப்ப நாயனார் புராணம், மானக்கஞ்சாற நாயனார் புராணம், அரிவாட்டாய நாயனார் புராணம், ஆனாய நாயனார் புராணம் ஆகிய புராணங்கள் இடம்பெற்றுள்ளன. மும்மையால் உலகாண்ட சருக்கம் என்ற இரண்டாவது பகுதியில் மூர்த்தி நாயனார் புராணம், முருக நாயனார் புராணம், உருத்திர பசுபதி நாயனார் புராணம், திருநாளைப் போவார் நாயனார் புராணம், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம், சண்டேஸ்வர நாயனார் புராணம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி என்பனவும் இடம்பெற்றுள்ளன.