கொழும்பு: ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xii, 137 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14 சமீ.
சேக்கிழார் சுவாமிகள் உள்ளிட்ட இறையடியார்கள், நாயன்மார்கள் பற்றிய கதைகளை வளர்ந்தோருக்கும் சிறுவருக்கும் ஏற்ற விதத்தில் சுவையாகவும் எளிமையாகவும் இந்நூலில் உள்ள 92 கட்டுரைகளின் வழியாகப் பதிவுசெய்திருக்கிறார். மாதாஜி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றவர். நாவலப்பிட்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் தமிழ், சைவசமய சிறப்பாசிரியராகக் கடமையாற்றியவர். காரைநகர் வர்த்தாக் கல்வி நிலைய குருகுலம், கிளிநொச்சி குருகுலம் ஆகியவற்றின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். குப்பிளானில் 1931இல் பிறந்த இந்நூலாசிரியர், இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் திரு ஈங்கொய் மலை ஸ்ரீ லலிதா சமாஜத்தில் சந்நியாசம், ஸ்ரீ வித்யா மந்திரம் ஆதியன பெற்று ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி என்ற சந்நியாச நாமம் பெற்றுக்கொண்டவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 209510).