ச.கணபதீஸ்வரக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). காரைநகர்: ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
ஈழத்துச் சிதம்பரம் என வழங்கப்படும், யாழ்ப்பாணம்-காரைநகர், ஸ்ரீ சுந்தரேசுவர சுவாமி கோவிலிலே மார்கழி மாதத் திருவாதிரையிலே ஓதப்பெற்றுவரும் ‘திருவூடல்’ நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி ஆலயத்தின் முன்னாள் பிரதம சிவாசாரியாரும் ஈழத்துச் சிதம்பரம் என்ற நூலாசிரியரும், அகில இலங்கை சைவசமயக் குருமார் சபை முன்னாள் தலைவரும், அகில பிராமண குரு சமூகசேவா சங்க முன்னாள் போஷகரும், திருக்கேதீச்சர சிவானந்த குருகுல பஞ்சாய முன்னாள் உறுப்பினருமாகிய சிவ ஸ்ரீ சரவணபவக் குருக்கள் கணபதீஸ்வரக் குருக்கள் (10.3.1888-13.3.1967) இந்நூலைத் தொகுத்துள்ளார்.