9227 வண்ணை வைத்தீஸ்வர வாலாம்பிகா தோத்திரக் கீர்த்தனம்.

ஸ்ரீமத் பாரத்துவாச பரமஹம்ச ஸ்ரீ தாசபிரம்மம் (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 1899. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2டீ, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xi, 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0877-16-4.

சைவத்தமிழ்ப் பண்பாட்டின் சொத்துக்களாக விளங்கும் ஆலயங்கள் பலவற்றிற்கு காலத்திற்குக் காலம் பல்வேறு வகையான பிரபந்தங்களைச் சார்ந்த இலக்கியங்கள் தோற்றம்பெற்றன. அத்தகைய மரபில் வண்ணார்பண்ணைப் பதியில் உறையும் ஸ்ரீ வாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரப் பெருமான்மீது பாடப்பெற்ற தோத்திர கீர்த்தனைகள், வாலாம்பிகை ஊஞ்சல், முத்துக்குமார சுவாமி ஊஞ்சல், பத்ரகாளி ஊஞ்சல் என்பன ஸ்ரீமத் பாரத்வவாச பரமஹம்ஸ ஸ்ரீ தாசபிரம்மம் அவர்களால் இயற்றப்பட்டு கி.பி. 1899இல் விவேகானந்த யந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 115 ஆண்டுகளின் பின்னர் மீள்பதிப்புக் கண்டுள்ளது. பதிப்பாசிரியர் ச.பத்மநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறை விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

14405 கொடகே சதர்த்தவாஹினீ வாணி கற்பகம் ஆங்கில-தமிழ் அகராதி.

வஜிர பிரபாத் விஜயசிங்க. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-1792 பக்கம்,